Pages

Ads 468x60px

Thursday, January 10, 2013

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் 90வது ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழ்

சுவாமி சதானந்தாவாழ்கை வரலாறு - சிறு குறிப்பு




சுவாமி சதானந்தா தன் வாழ்கையின் கடைசி காலத்தை ஆலப்பாக்கம் கிராமத்தில் (1909-1922) வாழ்ந்து ஜீவ சமாதி நிலையை அடைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த ஆலப்பாக்கம் எனும் கிராமம் சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் அமைந்துள்ளது.

சுவாமி சதானந்தசதானந்தா சுவாமிகள் தன் முதல் நிலை சீடர் ஸ்ரீ நாராயணசாமி ஐயா மூலமாக இங்கு அழைத்துவரப்பட்டார். சுவாமி சதானந்தா இங்கு வாழ்ந்த நாட்களில் கிராம மக்களுக்காகவும் தன் பக்தர்களுக்காகவும் நிறைய சித்துகளை நிகழ்தினார். தன்னுடைய ஜீவசமாதியை 1922 இல் ஏற்பாடுசெய்து கொண்டார். இங்கு அவர் தனது சூட்சும தேகத்தோடு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

பூர்வாசிரமத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக இருந்த சுவாமி சதானந்தா - ஒரு நவகண்ட யோகி, இந்த கலையை திருவிடைமருதூர் அவதூத மௌன சுவாமிகள் மூலமாக கற்றுக்கொண்டார்.



சுவாமிகளின் இந்த வருடத்திய 91வது மகா குருபூஜை விழா சிறப்புடன் நடைபெற இருக்கிறது . நிகழம் கர வருடம் தைத்திங்கள் 26ம் நாள் (29-01-2013)  மகம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் ஆன்பர்கள் மூலமாக நடக்கவிருக்கும் குருபூஜை விழாவில் பங்கேற்று சிவ - சத் - குருவின் திருவருளும் , அருளாசியும் பெற்று விழாவினை சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் அழைக்கின்றோம் .








இவ்வண்ணம்
தலைவர் - சுவாமி சின்மையானந்தா அவர்கள்
அருள்மிகு குருதேவதத் ஸ்ரீ சதானந்த சுவாமிகள் சேவா அறக்கட்டளை
( Regd.No.actXX1 of 1860 S.No.860 of 2009 )
சதானந்தபுரம் , சென்னை -600063.

All the Details taken from my friend Mr.HARIMANIGANDAN.V Blog. Links are Bellow 

0 comments:

Post a Comment